Sunday, April 3, 2011

அதிமுக கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நடக்க போகும் மாற்றங்கள்



ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி புதிய சட்டசபை கோயில் வடிவமைப்பில் கட்டப்படும். அதில் முதலைமைச்சர் உட்காரும் சீட்டுக்கு பதிலாக பெட் போடப்பட்டிருக்கும்.




அந்த சட்டசபை உள்அமைப்பு பாக்ஸிங்க் மேடைப் போல அமைக்கப் பட்டு நாட்டாண்மை அதுதான் சபா நாயகர் விஜயகாந்த் அமர்ந்து, கேள்விகேட்கும் எதிர்கட்சி MLA வை அழைத்து 5 குத்து குத்தி அனுப்புவார். அவர்கட்சிகாரர்கள் சபைக்கு வரும் முன்னரே அடிவாங்கி இருப்பதால் வாயை திறக்க முடியாமல் இருப்பார்கள்.


MLA யின் டேபிளில் தண்ணிர் பாட்டிலுக்கு பதிலாக டாஸ்மார்க் பாட்டில்கள் இருக்கும். முதல்வர் & துணைமுதல்வர் டேபிளில் ஃபாரின் சரக்கு இருக்கும்.


சட்டசபை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பே எல்லா தீர்மானங்களும் நிறைவேறப்பட்டு ஆட்டோமேட்டிக்காக ஜெயலலிதாவின் லேப்டாப்பில் இருந்து அறிக்கைகள் வந்துவிடும்,


போயஸ் தோட்டத்தில் இருந்து அம்மா போகும் ரோடு எல்லாம் ஐந்து மணி நேரம் டிராபிக் நிறுத்தப்படும் அதுமட்டுமல்லாமல் ரோட்டில் யாரும் நடக்க கூடாது. அம்மாவரும் நேரத்திற்கு முன்பாக ரோடுகள் சுத்தம் செய்யப்பட்டும் போலிஸும் குருக்களும் நிற்பார்கள் அம்மா வரும் நேரத்தில் அந்த ரோட்டில் இருக்கும் அலுவலகம்,கடை, மற்றும் வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே வந்து குருக்கள் சொல்லும் மந்திரத்தை சொல்லி அம்மாவை வாழ்த்த வேண்டும். அப்படி செய்யாதவர்கள் தமிழின துரோகிள் என அறிவித்து தண்டனைகள் தரப்படும்.மக்கள் வசதிக்காக அவரின் வருகைகள் தினசரி அம்மா ரிப்போர்ட் என்ற பெயரில் வரும். அதை டி.வியில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும்.


பம்பரம் சுற்றுவது தமிழகத்தின் மிக முக்கிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டு விஜயகாந்த் அதன் தலைவராக அறிவிக்கப்படுவார்


தமிழகத்தில் இருந்து வெளியிடப்படும் படங்கள் அனைத்தும் வாங்கப்பட்டு ஜெயலலிதா & விஜயகாந்த் தாயாரிப்பாக வெளிவரும்.


இப்பொழுது உள்ள ஆளூங்கட்சிக்காரர்களை கொள்ளைக்காரர்களாக அறிவித்து ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். நடிகர் வடிவேல் குண்டுமணி போல பெருத்து இருப்பார்( விஜயகாந்திடம் தினம் அடி குத்து வாங்குவதால்)


திமுக தலைவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் பாம்பு பல்லிகளுக்கு இடையில் இருப்பதால் தம்பி வைகோ அவர்கள் அடுத்த தேர்தல் வரும் வரை திமுக கட்சியின் அறிவிக்கப்பாடாத கொள்கைபரப்பு செயலாலராக இருப்பார்.

கம்யுனிஸ்ட் கட்சி வழக்கம் போல தெருவில் உண்டியல் குழுக்கி கொண்டிருபார்கள்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அம்மையார் அருகில் உட்கார்ந்து சிரித்தபடி திரைப்பட விழாவை கொண்டாடி கொண்டிருப்பார்

(09/11/2004 ல் ரஜினி பேசிய பேச்சு:தமிழ்த் திரையுலகை பெரும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைதெரிவிக்காவிட்டால் நான் சினிமாக்காரனே இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.


அவர் பேசியதாவது: இதுவரை நான் பல பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இதுதான் சத்தியமான பாராட்டு விழா. முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள சாதனைகள் சாதாரணமானது அல்ல. வீரப்பன்(கலைஞர்) பிரச்சினையும், வீராணம்(ஸ்பெக்ட்ரம்) பிரச்சினையும் நிச்சயம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதற்காக எனது மனமார்த்தபாராட்டுக்கள். ஹாட்ஸ் ஆப் டூ யூ!வீரப்பனை வீழ்த்தியதன் மூலம் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவிலும், உலக அளவில் இந்தியாவின் பெருமையையும்அவர் உயர்த்தி விட்டார்.)


அம்மையாரின் புதிய தத்துப் பிள்ளை திருமணத்தில் குடும்பத்தோடு வந்து வேலைகள் செய்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் அவருக்கு கோபாலபுரத்திற்கு செல்லும் வழி மறந்து இருக்கும்.


எந்திரன் படத்திற்கு போட்டியாக இந்திரன் படம் அப்போது எடுக்கப்படும்.

அரசியலில் நிரந்தர எதிரிகள் கிடையாது என்பதால் ராமதாஸ் ஜெயலலிதாவின் அழைப்பை எதிர்பார்த்து அவர் வீட்டு வாசலில் காத்துகொண்டிருப்பார்.

7 comments:

  1. உண்மையை புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. பம்பரம் விட தொப்புள் ஏற்பாடு செய்து தரப்பட்டும்!
    வெளிநாட்டில் இருந்து பம்பரம் (கமிசன்) வாங்காமல்
    இறக்குமதி செய்து தரப்படும்!

    ReplyDelete
  3. கொடநாட்டு மஹாராணி: மந்தி(ரி)களே மாதம் மும்மாரி பொழிகிறதா? மந்திகள்:மஹாராணியாரே ! தங்கள் ஆட்சியிலே தினம் மும்மாரி பொழிகிறது! அதுவும் வெறும் மழையல்ல! பொற்காசு மழை !

    ReplyDelete
  4. கொடநாட்டு மஹாராணி:மந்தி(ரி)களே,மாதம் மும்மாரி பொழிகிறதா?
    மந்திகள் கோரசு: மஹாராணியாரே ! வால்க! வால்க ! தங்கள் ஆட்சியிலே தினமும் மும்மாரி பொழிகின்றதைப் பெருமையுடன் தங்கள் காலடியில் விழுந்து தெரிவிக்கின்றோம். அதுவும் வெறும் மழையல்ல! பொற்காசுகள் மழை !

    ReplyDelete
  5. இவைகள் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். எது நடக்குமோ இல்லையோ, மம்மி வந்தால் நிச்சயம் வேறு ஒரு சட்டசபை கட்டிடம் தயாராகும். தி.மு.க. குடும்பம் அனைத்தும் உள்ளே தள்ளப்படும். மம்மி. காங்கிரசு, விசய காந்து என புது கூட்டணி உருவாகும் நிச்சயம்.வழக்கம் போல வை.கோ. பிலாக்கணம் வைப்பார். கம்யுனிஸ்டுகள் சொல்லிவைத்தார்போல தி.மு.க. பக்கம் வந்துவிடுவார்கள். எல்லாம் முன்னரும் பார்த்ததுதானே!

    ReplyDelete
  6. நீங்கள் சொல்வது போல் நடக்குனும்னு இருந்தால் அதை யாராலும் தடுக்கமுடியாது தலைவா!
    ஏன் முடியாது ஓட்டு போடுமுன் ஒவ்வொரு குடிமனும் நினைத்தால் முடியும்.........

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.