Tuesday, April 5, 2011


காங்கிரஸ்& திமுக செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து முடிக்க சபதம் நீங்கள் அவருக்கு ஓட்டு போட்டால்...



சிறுதாவுதுர் பங்களாவில் இருந்து மீனவர்களுக்காக கடுமையாக போராடிய ஜெயலலிதா இந்த தேர்தலில் தம்மை ஜெயிக்க வைத்தால் அவர்களின் கண்ணிரை துடைக்க சபதம் மேற்கொண்டுள்ளார்



( அதற்கான திட்டம் : கர்சீபில்(கைக்குட்டை) அம்மா படம் அச்சடித்து தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படும். நீங்கள் அழும் போது எல்லாம் இந்த கைக்குட்டையை வைத்து துடைத்தால் அம்மாவே நேரில் வந்து துடைத்தது போல இருக்கும்.



மீண்டும் திமுக ஆட்சி வந்தால் அந்த கொள்ளைகாரர்கள் தமிழர்கள் உடுத்தி இருக்கும் துணிகளையும் உருவி விடுவாரகள் எங்களை ஆட்சியில் அமர்த்தினால் அந்த மாதிரி எல்லாம் உங்களை அம்மணமாக இருக்க விட மாட்டோம்



( ஆமாம் நாங்க அந்த அளவு மோசம் அல்ல நாங்கள் உங்கள் துணிகளை உருவினாலும் இரட்டை இலை பதித்த கோவணத்தை தமிழக மக்களுக்கு கொடுத்து அவர்கள் மானத்தை காப்பாற்றி விடுவோம்)

மக்களே 2 ஜீ எல்லாம் ஒன்னும் இல்லை அது ஜுசிப்பி 4ஜீ இருக்கு நமக்கு 4ஜீல 1ஜீ எனக்கு 1ஜீ சசிகலாவுக்கு 1ஜீ விஜயகாந்துக்கு 1ஜீ மத்திய அரசுக்கு அப்ப தமிழக மக்களூக்கு என்னவென்று கேட்கீறிர்களா? அவாளுக்கு எல்லாம் பெரிய நாமம்தான் ஜீ..





அதனால் தமிழர்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட்டு மானத்தை காப்பாற்றி கொள்ளமாறு அனைவரையும் ஜெயலலிதா சார்பில் கேட்டு கொள்கிறேன்

5 comments:

  1. ஜெயலலிதா/கலைஞர் இருவருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தானே !

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  2. போன பதிவு சூப்பர்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.