Thursday, September 15, 2011

அதிக அளவு ஹிட்ஸ் வரும் பதிவு எழுத  அனுபவ ஐடியா


நீங்க லேப்டாப்லேயும் எழுதலாம், டெஸ்க்டாப்புலேயும் எழுதலாம்! எதுக்கும் எழுதுறதுக்கு முன்னாடி, வைரஸ் ஏதும் இல்லாமல் பாத்து ரெடியா வச்சுக்குங்க!


செல்லை ஆப் பண்ணி வச்சிடுங்க! நீங்க நல்ல மூட்ல எழுதிக்கிட்டிருக்கும் போது  வேறு ப்ளாக்கர் நண்பரோ போன் பண்ணி என்னடா என் பதிவை படிக்கலையா அல்லது தமிழ்மணத்தில் ஒட்டு போடலியா என்று கேட்டு மூட் அவுட் பண்ண வாய்ப்பு இருக்கு!

கல்யாணமாகியிருந்தா பொண்டாட்டிய அவுங்க அம்மா வீட்டுக்கு அல்லது துணிக்கடைக்கோ  அனுப்பிடுங்க! பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு இதுவரைக்கும் எந்த பதிவாளரும் பதிவு எழுதினதா சரித்திரம் இல்லை!


அப்புறம் உங்க வீட்டுக்கு ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைச்சுகுங்க! நீங்க பாட்டுக்கு ஜாலியா பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் போது பொசுக்குன்னு கரண்டு போயிடுச்சுன்னா, உங்க மூடு அவுட்டாகிடாது ?

மேஜையில அல்லது அக்கம் பக்கத்துல முகம் பார்க்கும் கண்ணாடி இருந்த, அதை எடுத்துட்டுப் போய், தூரமா வச்சிடுங்க! எதேச்சையாகூட உங்க முகத்தை நீங்க பார்க்க நேர்ந்தால், அப்புறம் உங்களால ஒரு பதிவுகூட எழுத முடியாது!

உங்க கல்யாண ஆல்பத்தில இருந்து ஒரு போட்டோவை  எடுத்து பக்கத்தில வைச்சிடுங்க! அதைப் பார்க்க பார்க்க உங்கள் மனம் துடிக்கும் கைகள் பரபரக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்- அப்புறம் பதிவு பதிவா எழுதி தள்ளுவீங்க! - துன்பத்தில்தான் நல்ல பதிவு பிறக்கும் மக்காஸ்.


இவ்வளவும் பண்ணியும் உங்களுக்கு பதிவு எழுத வரலியா? கடைசியா மிக அருமையான ஐடியா இருக்கு! நீங்க முதல் முதலா  காதல் பண்ண பெண்ணை பற்றி எங்காவது எழுதி வைச்சிருந்தா தேடி எடுத்து வாசிச்சுப் பாருங்க - அதில இல்லாத  நகைச்சுவையா  அல்லது சோகமா? ஆயுசுபூரா உங்களுக்கு தேவையான நகைச்சுவை அல்லது சோகம் அதில்தான் நிறைய இருக்கும்

அப்புறம் என்ன உங்க ப்ளாக்ல நகைச்சுவை அல்லது சோகத்தை அள்ளிவிடுங்க - ஹிட்சுகள் எகிறும்! பின்னூட்டாங்கள் கரை புரளும்!! பலோவர்ஸ் நூற்று கணக்கில்  வருவர்கள்! தமிழ் தடுமாறும்!! சரித்திரம் தடம் மாறும்.....சும்மா அதிரும்ல உங்க பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!



இவ்வளவு பண்ணியும்  ஹிட்ஸ் வரலைன்னா   கீழேயுள்ளவைகளை கடைபிடிக்கவும். இதை கடைபிடித்தால் கண்டிப்பாக  தமிழ்மணத்தில் டாப் 50 ல் வருவீர்கள்.அதன் பின் ஹிட்ஸ் உங்களை தேடிவரும்.



1. உடனடியாக ஜுனியர் விகடன், ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகளூக்கு உடனடியாக ஆன்லைன் சந்தாதாரர் ஆகி அதில் வரும் பரபரப்பு விஷ்யங்களை காப்பி பண்ணி உங்கள் ப்ளாக்கில் உடனடியாக போடுங்கள். இலவசங்களுக்கு ஆளா பரக்கும் நம் தமிழ் மக்கள் அந்த பத்திரிக்கைகளுக்கு சந்தாதார் ஆகமால் உங்கள் ப்ளாக்கிற்கு ப்லோவர்களாக வந்து சேர்ந்து நீங்கள்தான் அந்த பதிவை எழுதியதாக கருதி, அருமையாக எழுதி இருப்பதாக பின்னூட்டம் இடுவார்கள்.



2. இது அவசர உலகம் அதனால் எல்லோருக்கும் நேரம் மிகவும் முக்கியம் அதுதனால் அவர்களுக்கு நெட்டில் வரும் எல்லா கவர்ச்சி படங்களையும் பார்ர்க்க நேரம் கிடையாது அதனால் நீங்கள் உங்கள் நேரத்தை செலவழித்து பெஸ்ட் கவர்ச்சிபடமாக தெரிவு செய்து போடுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எவ்வளவு ஹிட்ஸ் பெருகிறீர்கள் என்று



எனக்கு தெரிஞ்சவைகளை சொல்லிட்டேன். எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா பேசாம கடையை மூட்டிட்டு பொடி நடையா போங்கப்பா

எல்லோரும் ஹிட்ஸ் பற்றி பதிவு போடுறாங்க நாம மட்டும் போடாம இருந்த எப்படி? அதுனால வந்ததுதான் இந்த பதிவு

5 comments:

  1. அருமையான ஐடியா சார்!

    உண்மைவிரும்பி.
    மும்பை

    ReplyDelete
  2. முயற்சித்து வெற்றி பெற்ற பதிவா இது. அனைத்து குறிப்புகளும் சொல்லவில்லை என்று எனக்கு சந்தேகம்தான் ஏனென்றால் உலகமே அரக்கபரக்க ஓடி வந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தலைப்பை வைக்க வேண்டுமே அந்த குறிப்பை விட்டுவிட்டீர்களே (இந்த பதிவின் தலைப்பைபோல்..)

    வலைப்பூவை ஆரம்பித்துவிட்டு விசிட்டிங்க் கார்டு போடாதகுறையாக கேன்வாஸ் செய்து கொண்டிருப்பவர்களை டார்கெட் செய்து இருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. சூப்பரான ஐடியா
    முயற்சித்துப் பார்க்கிறேன்
    ஜாலியாக இப்படி உங்களை மதிரிஎழுதப் பழக
    அசையா இருக்கு
    முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    த.ம 2

    ReplyDelete
  4. GOOD POST KEEP IT UP.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.