Sunday, October 9, 2011


வெட்டிப் பதிவுகளுக்கு ஒட்டுப் போடும் வீணாப் போன பதிவாளர்களே

வெட்டிப் பதிவுகளுக்கு ஒட்டுப் போடும் வீணாப் போன பதிவாளர்களே. தமிழனின் பிரச்சனைக்காக உங்களால் ஆதரவு அளிக்க முடியவில்லையா? ஏன் உங்கள் வீட்டில் இணைய வசதி இல்லையா அல்லது மனம் இல்லையா?
இலங்கை பிரச்சனைகள் குறித்துவாய்கிழிய பேசும்மற்றும் எழுதும் உங்களுக்கு இதற்கு நேரம் இல்லாமலா போய்விட்டது.


இலங்கைப் பிரச்சினை குறித்து எத்தனையோ ஓட்டளிப்பு பங்கு ஆற்றிவிட்டோம். இந்த முயற்சி வெள்ளை மாளிகை வரையென்பதால் பதிவுலகம் சார்பாக இன்னுமொரு முயற்சி செய்துவிடலாமே! தகவல் உடனடியாகப் போய் சேரும் இந்த நேரத்திலும் 5000 ஓட்டுக்கு 3054 (இன்றைய நிலவரப்படி அக்டோபர் 9. 2011) ஒட்டை மட்டுமே எட்டி பிடித்து இன்னும் முழுவதையும் எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலா தமிழர்கள் இருக்கிறோம்? இதற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதனால் நீங்கள் இழக்க போவது ஏதுமில்லை.


இன்னும் ஏன் தயக்கம் தமிழர்களாகிய நமது குரலை வெள்ளை மாளிகை வரை கொண்டு செல்வோம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வெள்ளை மாளிகை தளத்தில் ஓட்டுப் போடுவதுதான்.


கையெழுத்திட விரும்புவோர் கீழ்கண்ட இணைப்பில் சென்று உங்களது ஆதரவை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இதை   மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்களேன்

1 comments:

  1. இது வரை யாருக்கும் நான் ஓட்டு போடவில்லை, ஆனால் இதற்க்கு போட்டு விட்டேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.