Sunday, September 30, 2012




ஒரு 'மாதிரியான' கதை 'மன முதிர்ச்சி' உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்

இன்று நான்  சக பதிவாளரின் பேஸ் புக்கில் படித்தது
கர்ப்பமுற்ற பெண் யாரை நினைச்சிட்டு இருக்காங்களோ அவங்க சாயலிலேயே குழந்தைபிறக்குமாம்...,
பிரசவித்தவள் என்மனைவி...,
குழந்தை உன்சாயலில்....,
உன்னையே நினத்திருந்தவன் நான்....

அதை படித்தது கிழே உள்ளதை கமெண்ட்ஸாக போட்டுடேன்

///கர்ப்பமுற்ற பெண் யாரை நினைச்சிட்டு இருக்காங்களோ அவங்க சாயலிலேயே குழந்தைபிறக்குமாம்...,///
அப்படி இருந்தா தமிழ்நாட்டுல நிறைய குழந்தைகள் சூர்யா போல இருப்பாங்க


அதன்  பிறகு  மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மெஜூரா காலேஜ் ஹையர் செகண்ட்ரி பள்ளியில் '9 C'  நான் படித்த போது எனது வரலாற்று ஆசிரியர் எங்களுக்கு சொன்ன கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

இது நல்ல கதை அல்ல என்பதால் அதை படிக்க விரும்பாதவர்கள் மேலே தொடர வேண்டாம் 


ஆண்கள் சந்தோஷமாய் இருந்தால் பெண்களுக்கு அது பிடிக்காது. இது இந்த காலத்தில் மட்டுமல்ல அந்த காலத்திலும் கூடத்தான்
அப்படிதாங்க அந்த காலத்தில் பெண்கள் எல்லோருக்கும் ஒன்று கூடி நாம பத்து மாசம் கஷ்டப் பட்டு பிள்ளையை வயிற்றில் சுமந்தும் பிள்ளை பெறும் போதும் வலியால் துடிக்கிறோம் ஆனால் அதற்கு காரணம் ஆனா ஆண்கள் எந்த பிரச்சனை இல்லாமலும் சந்தோஷமாக இருக்கிறார்கள் இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கருதி எல்லோரும் சேர்ந்து பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவே நாங்கள் 10 மாதம் கஷ்டப்பட்டு குழந்தையை சுமக்க தயார் ஆனால் பிள்ளை பெறும் போது உண்டாகும் வலியை அந்த குழந்தையின் தந்தைக்கு தரம் வேண்டுமென்று முறையிட்டனர். ஆனால் பிரம்மா அதெல்லாம் வேண்டாம் அப்படியெல்லாம் கேட்காதீர்கள் என்று சொன்னார். ஆனால் அவர்கள் பிரம்மாவை வற்புறுத்தி அந்த வரத்தை பெற்றுக் கொண்டனர். அதன் படி குழந்தை பிறக்கும் போது அதன் தந்தைக்கு வலி யெடுக்கும் என்று சொல்லி அவரும் மறைந்து விட்டார்


அதன் பிறகு ஒரு பெண் முதன் முதலில் குழந்தை உண்டாகி குழந்தை பெறும் சமயம் வந்தது. அப்போது அந்த பெண் கடை வைத்திருக்கும் தன் கணவர் வலியால் துடிப்பார் என்று கருதி வீட்டில் இருந்த சகோதரனை கடைக்கு சென்று கணவருக்கு உதவி செய்யுமாறு அனுப்பினார். அவனும் கடைக்கு சென்று அவரிடம் விஷயத்தை சொன்ன போது அவர் சொன்னார் எனக்கு வலி ஏதுமில்லையே என்று சொல்லி சரி வா வீட்டிற்கு சென்று பார்ப்போம் என்று சொல்லி சென்றார். அவர் வீட்டிற்கு சென்ற பார்த்த போது அழகான குழந்தையை அவர் மனைவி பெற்று எடுத்து இருந்தார். அப்போது எல்லோரும் வலி ஏதுமில்லாமல் குழந்தை பிறந்த்தை  எண்ணி ஆச்சிரியப்பட்டனர். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் இருந்து  யாரோ அலரும் சத்தம் கேட்டு அனைவரும் எண்ணவென்று பார்க்க ஒடினார்கள் அப்போது அடுத்த வீட்டு இளைஞன் வலியால் துடித்து கொண்டிருந்தான்.

அதனை அறிந்த அனைத்து பெண்களும் பின் மீண்டும் பிரம்மாவிடம் போய் அந்த வரத்தை வாபஸ் வாங்கி கொண்டார்கள்

டிஸ்கி 1: இந்த கதை மோசம் என்று கண்டம் செய்பவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அந்த கண்டணங்கள் எல்லாம் எங்களுக்கு கதை சொன்ன ஆசிரியருக்கே சேரும்

மேலும் செக்ஸ்கல்வி பற்றி பள்ளியில் சொல்லிதர வேண்டுமா இல்லையா இன்று வரை விவாதித்து வரும் வேளையில் அப்போதே அது பற்றி மாணவர்களுக்கு இருந்த சந்தேகம் எல்லாம் பற்றி மிக விரிவாக சொன்னவர் அவர். அதற்காக அவருக்கு நன்றி சொல்லதான் வேண்டும்.

டிஸ்கி 2 : நான் அந்த பள்ளியில் படித்தது 5 C யில் இருந்து 10  C வரை ,ஆனால் எங்களுக்கு வந்த ஆசிரியர் எல்லாம் இப்போது டிவி சிரியலில் வரும் 7 C ஆசிரியர் ஸ்டாலின் போல அல்ல.. மாணவர்கள் வகுப்பில் இருந்து கட் அடிப்பதை கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நான் படித்த போது ஆசிரியர்கள்தான் வகுப்புக்கு வராமல் கட்டு அடித்து ஹெட்மாஸ்டருக்கு அடிமை வேலை செய்ய போய்விடுவார்கள்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

5 comments:

  1. உங்க வாத்தியார் சொன்ன வேற எதுவுமே ஞாபகம் வரலையா!அந்த வாத்தியார பசங்க யாரும் மறந்திருக்க மாட்டாங்க!

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் பாடம் சொல்லி கொடுத்து இருந்தால் அது ஞாபகத்தில் இருந்து இருக்கும் ஆனால் அவர் சொல்லி தந்ததே இது மாதிரியான விஷயங்கள் தானே.....

      Delete
  2. என் தெருவுல இருக்க எல்லா பசங்களும் என்னை மாதிரியே இருக்க அதான் காரணமா? ஓ... இப்போ தான் புரியுது

    ReplyDelete
  3. "அப்படி இருந்தா தமிழ்நாட்டுல நிறைய குழந்தைகள் சூர்யா போல இருப்பாங்க"
    தமிழ்நாட்டுப் பெண்களை இவ்வளவு கொச்சைப்படுத்தும் நீ வெளிமாநிலக்காரனா?

    ReplyDelete
  4. உண்மை.யா௫ம்.ஒப்புகொள்ள மட்டார்கள்..இன்றயா .சமுதயதிற்கு.ஏற்ற.கதை.இல்லை.நிஜம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.