Wednesday, April 17, 2013



தினமலர் சொல்லும் புதுக் கதை தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரர் அல்ல .

தீரன் சின்னமலை பிறந்த நாளை ஒட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அந்த செய்தியை வெளியிட்ட தினமலர் தீரன் சின்னமலையை சுதந்திர போராட்ட வீர்ர் என்று சொல்லுவதற்கு பதில் தந்திர போராட்டவீரர் என்று  முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.




அது அவர்கள் செய்த  எழுத்துபிழையா  அல்லது வேண்டுமென்றே வெளியிட்டு இருக்கிறதா?

அவர்கள் செய்தது எழுத்துப் பிழை என்றால் யானைக்கும் அடி சறுக்கும் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை இங்கே நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் தமிழகத்தில் கட்சிகாரர்கள்( முக்கியமாக திமுக ) அடிக்கும் போஸ்டரில் எழுத்து பிழைகள் இருந்தால் அதை போட்டோ எடுத்து வெளியிட்டு கிண்டல் செய்வார்கள்.



அப்படி கிண்டல் செய்பவர்கள் எழுத்து பிழை செய்தால் நாங்களும் அவர்களை கிண்டல் செய்வோம்...


அன்புடன்
மதுரைத்தமிழன்

படிக்காதவர்கள் படிக்க :
தவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிடம்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.