Sunday, April 3, 2016



தோழிக்கு வாழ்த்துக்கள்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்  நாம் தொல்லைகள் எல்லாம் மறந்து வாழும் நல்ல நாள்


இன்று பிறந்தநாள் காணும் தோழிக்கு வாழ்த்துக்கள். எண்ணத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் இனிமை கொண்ட மைதிலி அவர்களை இந்த இனிய நாளில் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...




மகிழ்ச்சி நிறைப்பாள் மகிழ்நிறை நட்பாம்
பகிரும் பிரியம் பளிங்கென மின்னும்
பிறந்த தினமின்று பேருவகை தானே
சிறந்து செழித்திடச் சீர்மிகு வாழ்த்து!

Happy Birthday Dear! May God bless you!

என்னடா இந்த வெண்பா வாழ்த்தை மதுரைத்தமிழன் எழுதி இருக்கிறானே என்று ஆச்சிரியம் எல்லாம் பட வேண்டாம். இதை எழுதி வாழ்த்தியவர் சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ் . அவர்களின் பேஸ்புக் தளத்தில் இருந்து சுட்டு இங்கே போட்டது மட்டும் நான்


சரி மக்களே  உங்களுக்கும் கவிதை எழுத வரும் என்றால் கவிதையை எழுதி வாழ்த்துங்கள் இல்லையென்றால் கவிதையை என்னை மாதிரி சுட்டு அவரை வாழ்த்தி செல்லுங்கள்...


அன்புடன்
மதுரைத்தமிழன்

20 comments:

  1. சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வாழ்த்துக்கள் அவங்களை இன்னும் பல்லாண்டு வாழ வைக்கும்

      Delete
  2. ஆஹா!! முகநூலில் நீங்கள் போட்டிருக்கும் படத்தைமட்டும் பார்த்துவிட்டு இணைப்பை இப்பொழுதுதான் பார்க்கிறேன்! :)
    மைதிலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வாழ்த்துக்கள் அவங்களை இன்னும் பல்லாண்டு வாழ வைக்கும்

      Delete
  3. அருமையான வாழ்த்துரை மதுரைத்தமிழா! மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நம் அன்புச் சகோதரிக்கு! நம் அன்புச் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    கீதா: நான் முகநூலில் இல்லாததால் எனக்குத் தெரியவில்லை தமிழா. இப்போது உங்கள் பதிவு பார்த்துத்தான் அறிகின்றேன். மைதிலியை அழைத்தால் ஸ்விச்ட் ஆஃப் என்று வருகின்றது...

    என் அருமை அன்புத் தோழி மைதிலிக்கு என்றென்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகின்றேன் இந்த இனிய நாளில். MANY MORE HAPPY RETURNS OF THE DAY MYTHILI!!!!

    ReplyDelete
    Replies
    1. அவங்க பெரிய ஆளுங்க ரொம்ப பிஸியாக இருப்பாங்க அவங்களை எல்லாம் தொந்தரவு பண்ணக் கூடாது

      Delete
    2. நன்றி உங்கள் வாழ்த்துக்கள் அவங்களை இன்னும் பல்லாண்டு வாழ வைக்கும்

      Delete
  4. என் தலைல நானே குட்டிக்கிட்டேன்! எதுக்கு?

    அட! மதுர இவ்வளவு அழகா கவிதையும் எழுதுவாரா! அப்ப டிமான்ட் பண்ணனும் - மக்களை ஏமாத்திக்கிட்டுருக்கறவங்கள பத்தி எழுதறத கொஞ்சம் அப்படி வைச்சுட்டு தமிழுக்குச் சேவை செய்யுங்கனு - அப்படினு நினைச்சு வந்தா செம பல்பு! தெரிஞ்சும் ஏமாந்துட்டேனே அப்படினு..ஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies

    1. எனக்கு கவிதை எழுத தெரியாதுன்னு பல பேர் நினைக்கிறாங்க...ஆனால் எனக்கு நல்லாவே எழுத தெரியும் இங்க பாருங்க் நான் க வி தை என்று எழுதி இருக்கிறேன்... நம்ம கடி எப்படி? இனிமே கவிதை பற்றி என்னிடம் கேட்பீங்க கேட்பீங்க கேட்பீங்க

      Delete
    2. கடி தாங்கல....கேக்கமாட்டேன் கேக்க மாட்டேன் கேக்க மாட்டேன் ஹஹஹ்

      Delete
  5. தங்கை மைதிலியை, அவர் துணைவர் கஸ்தூரி ரெங்கனோடு எதார்த்தமாய்ப் பார்த்து, பக்கத்திலுள்ள புத்தகக்கடைக்கு இருவரையும் இழுத்துப்போய் நானும் என் துணைவியாருமாய் இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தோம். இங்க வந்தால் வெண்பா வாழ்த்து. அதில் ஒரே ஒரு திருத்தம் செய்ய வேண்டும் -வெண்பா இலக்கணம் வேண்டுமென்றால் மட்டும்-
    ஈற்றடியை ஒரு சீர் குறைத்து “சிறந்திடச் சீர்மிகு வாழ்த்து” என்று முடிக்க வேண்டும். (ஈற்றடி முச்சீர் ஏனையடி நாற்சீர் என்பதே வெண்பா இலக்கணம் என்பதால்) மற்றபடி தங்கை கிரேசின் வெண்பா முயற்சிக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ கிரேஸ் எங்கே இருந்தாலும் சிக்கிரம் இங்கே வரவும் நம்ம தலைவர் முத்துநிலவன் ஏதேதோ சொல்லுகிறார் ஒன்றுமே புரியவில்லை.....(மைண்ட் வாய்ஸ் : இதுக்குதான் சொந்தமா எழுதணும் கடன் வாங்கி போட்டா இப்படிதான் யாரவது கேள்வி கேட்டபாங்க அப்புறம் நாம் திருட்டு முழி முழிக்கணும்...)

      Delete
    2. நன்றி அண்ணா. ஆமாம் அண்ணா, ஈற்றடியில் முச்சீர் இல்லை, கலி விருத்தமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். அப்படியென்றால் சரியா அண்ணா?

      Delete
    3. ஹாஹா சகோ, வெண்பா வாழ்த்தை என்று நீங்கள் போட்டிருப்பதைப் பார்த்து, வெண்பா இல்லை என்று நான் சொல்லியிருக்கவேண்டும். don't worry!
      அண்ணா என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து மாற்றிவிடுவோம்.

      Delete
    4. கிரேஸ் நீங்க எல்லாம் என்ன மொழியில் பேசுறீங்க.... ஏதோ ரகசிய மொழியில் பேசுறீங்க என்பது மட்டும் தெரிகிறது.... எதுக்கு என்னை இரண்டு அடியில் மூச்சை நிறுத்தனும் மற்றும் களி விருந்து எல்லாம் கொடுக்கனும் என்று சொல்லுறீங்க களி எல்லாம் ஜெயிலில்தானே தருவாங்க அங்கே என்னை அனுப்பி விருந்து சாப்பிட வைக்க ஏற்பாடு பண்ணுறீங்களா? ஏன் அப்படி நான் என்ன தப்பு பண்ணீனேன்

      Delete
    5. ஹஹஹஹஹ் ஐயோ ரொம்ப ரசிச்சேன்பா ஹஹஹஹ் ,,,இதுக்குத்தான் ஃபேஸ்புக் மண்டபத்துல எல்லாம் போய் வாங்கிட்டு வந்துருக்கக் கூடாது பாருங்க நக்கீரர் மாதிரி முத்துநிலவன் அண்ணா வந்து சொல்லப் போக உங்க நிலைமை பாருங்க...ஹிஹி..

      கீதா

      Delete
  6. எல்லோருக்கும் பல்பு கொடுக்கும் தமிழரே...
    இங்கே வாழ்த்துகள் மட்டுமே தந்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. நான் பொதுவாக வாழ்த்தை பேஸ்புக்கிலோ அல்லது அவர்களின் வலைத்தளத்தில் கருத்து பெட்டியில் மட்டுமே சொல்வதுண்டு. தலைவர்களுக்கு மட்டும் இங்கே பதிவாக இடுவதுண்டு..ஆனால் வருங்கால தலைவர் என்பதால் இன்று இங்கே பதிவாக இட்டு இருக்கிறேன்

      Delete
  7. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மைதிலி.....

    ReplyDelete
  8. மைதிலிக்கு பிறந்த நாளா!! என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க, மதுரைத் தமிழரே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.