Friday, September 16, 2016



தமிழர்களின் தண்ணிர் பிரச்சனையை தீர்க்க  பிரதமர் மோடி உறுதி

தமிழர்களை காக்க மோடி புதிய திட்டம் 






சென்னை 16 :காவி¡¢ பிரச்சனையால் கர்நாடாகா தமிழ்நாட்டிற்கிடையே ஏற்ப்பட்ட பிரச்சனைகளை கேள்விப்பட்ட மோடி அவர்களுக்கு சில நாட்களாக சாப்பிடவும் பிடிக்கவில்லையாம். அதனால் அவருக்கு நெருக்கமான தொழில் அதிபர்களையும் கட்சி தலைவர்களையும் கலந்து ஆலோசித்து அதன் படி தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடிவு செய்து இருக்கிறார். அதன்படி இனி தமிழகம் தண்ணிருக்காக அண்டைய மாநிலங்களை எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை. அதற்காக தமிழ் மக்களை பலி கொடுக்க தேவையும் இல்லை..


இந்த புதிய திட்டத்திற்காக தமிழக நலன் கருதில் பல ஆயிரம் கோடி செலவிட்டு தண்ணீரை கொண்டு வர முயற்சிக்கிப் போகிறார். இந்த திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மேலும் பல ராக்கெட்டுக்கள் விட்டு அங்கு இருப்பதாக கருதப்படும் தண்ணிரை தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற போகிறார்.

அதனால் தமிழக மக்கள் பந்த் ஏதும் பண்ணாமல் அமைதியாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டு கோள் விடுவித்து இருக்கிறார்.


இஞ்சினியர் தினத்தன்று சென்னை ஏர்போர்ட்டை கட்டிய இஞ்சினியருக்கு பாராட்டு விழா எடுக்காத தமிழர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் "மதுரைத்தமிழன்"



தமிழுணர்வு கொண்ட கலைஞர் போன்றவர்களே தீக்குளிக்காத போது இந்த முட்டாள் பய புள்ளைங்கதான் தீக்குளிக்கிறாங்க! வேதனையாகத்தான் இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்
 

4 comments:

  1. ஹா... ஹா....
    அது சரி...செவ்வாய் கிரகம் போறாரா...?

    அருவாளைக் கொடுத்துட வேண்டியதுதான்...

    ReplyDelete
  2. காவிரி தண்ணிக்காக ஏன் இப்படி போராடனும். தீக்குளிக்கணும். போஸ்ட் ஆபீஸ்லதான் கங்கை தண்ணியே கிடைக்குதே!

    ReplyDelete
  3. நீங்க என்ன.. செவ்வாய்க்கிரகம்னு சொல்லிட்டீங்க. நான் கேள்விப்பட்டது, மீனவர்களை அண்டார்டிக்கா பகுதிக்கு அனுப்பி அவங்க போட் மூலமா ஐஸ் கட்டிகளை தமிழகத்துக்குக் கொண்டுவந்து காவிரி டெல்டா பகுதியில் விடுவது அல்லவா? அண்டார்டிக்கா பகுதியில் தோண்டுவதற்கு அதானிக்குக் காண்டிராக்ட் விடுவார்கள். அதற்கான செலவுக்காக பாரத ஸ்டேட் வங்கி ஏதோ லட்சங்களில் கடன் கொடுப்பதாகக் கேள்வி. உங்கள் புலனாய்வை இன்னும் கூர்மையாக்குங்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.