Friday, October 21, 2016



vikatan 90 years editor opinion
கலைஞர் தாத்தாவும் விகடன் தாத்தாவும் அண்ணன் தம்பிகள்தானா? vikatan-90

கலைஞர் தாத்தவை பின்பற்றி விகடன் தாத்தாவும் தொன்னூறு வயதில் அடி எடுத்து வைக்கிறார். தொன்னூறு வயதில் அடி எடுத்து வைக்கும் விகடன் தாத்தாவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த இரண்டு தாத்தாக்களையும் நான் கலாய்த்தும் கழுவி கொட்டியும் பதிவுகள் எழுதிய  போதிலும் இவர்கள் இருவரும் எனது சிறு வயதில் மனசு பூரா நிறைந்து சந்தோஷங்களை அள்ளி அள்ளி கொடுத்தனர் என்பதை என்னால் மறக்க முடியாது



என்னை பொருத்த வரையில் கலைஞரும் விகடனும் அண்ணன் தம்பி மாதிரிதான். இருவரும் இளம் வயதில் மிக தனித்தன்மையோடு  உலா வந்து தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் மனதில் இடம் பிடித்தனர். இவர்கள் இருவருமே கிண்டல் கேலி இலக்கியம் கதை கவிதை என்று பலதுறைகளில் கலக்கி வந்தனர்..

எனது இளம் வயதில் எனது குடும்பத்தினர் நண்பர்கள் தவிர எனக்கு மிக அதிகம் பிடித்தவர்கல் இவர்கள் இருவரும்தான்.இவர்கள் இருவர் மீதும் எனக்கு ஒருவிதமான வெறி இருந்தது ஆனால் அது ஆண்டுகள் பல கடந்ததும் அவர்களின் செயல்பாடுகளின் காரணமாக அவர்களை விட்டு விலகிவிட்டேன் காரணம் இந்த இருவர்களின் செயல்பாடுகள் எண்பதற்கு அப்புறம் வெகு வேகமாக மாறியது. முன்பு மக்களை கவர வேண்டும் என நினைத்து செயல்பட்டவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை மக்களை கவர்வதற்கு பதிலாக மக்களிடம் இரூக்கும் பணத்தை கவரவே பல திட்டங்களை தீட்டி செயல்பட்டார்கள்.

அதனால்தான் விகடன் குழுமத்தில் இருந்து பல வெளியிடுகள் வந்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்ததால் அதன் தரம் குறைந்து போனது அது போல கலைஞருக்கும் மக்களுக்கு செய்த தொண்டுகள் போது என்று நினைத்து தன் மக்களுக்காக பணம் சம்பாதிக்க ஆரம்பித்த போது அவரின் தலைமையில் மீது இருந்த கவர்ச்சியும் குறைந்து போனது.

விகடன் வெளியிடு= கலைஞர் வெளியிடு

ஜுவி =  ஸ்டாலின்
டைம்பாஸ்=அழகிரி
அவள்விகடன் =கனிமொழி
சக்திவிகடன்=செல்வி
பசுமைவிகடன்=முத்து
நாணயம்விகடன்=தமிழரசு
சுட்டிவிகடன்=உதயநிதி
மோட்டார்விகடன்=துரைதயாநிதி



மக்கள் இவர்கள் இருவரையும் பழையபடி செயல்படவே விரும்புகிறார்கள் ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்குள் இருந்த வீரியமும் குறைந்து போய்விட்டதால் இப்போது தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்கள்


சரி இவர்களுக்குதான் வயசாகிவிட்டதே அதனால் இவர்களின் வாரிசுகளாவது ஊக்கமாக செயல்பட்டு மக்களை கவர்வார்கள் என நினைத்தால் அவர்கள்  இன்னும் மோசமாக அதை வழி நடத்துகிறார்கள்

எனக்கு கொஞ்சம் தமிழும், கிண்டல் மற்றும் நையாண்டி  வருகிறது என்றால் அதற்கு இந்த இருவரும் மட்டுமே காரணம் மேலும் எனது இளமை பருவத்தில் இருந்து நான் அமெரிக்கா வரும் வரை எனக்கு சந்தோஷம் தந்ததும் இவர்கள்தான்.. அதனால் இந்த இருவருக்கும் வயதான போதிலும் எனது வாழ்த்துகள் இவர்களுக்கு என்றும் உண்டு. இரண்டு தாத்தாக்களும் நம் தாத்தாதான்

90 - வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆனந்த விகடனுக்கு  எனது வாழ்த்துக்கள். விகடன் பழைய விகடனாக மீண்டும் வர என்பதுதான் எனது ஆசைகள்


டிஸ்கி : சிறு வயதில் கலைஞரின் பேச்சுகளையும் அவரின் எழுத்துக்களையும் ஒரு வெறியோடு படிப்பேன் அது போல அண்ணாவிம் மறைவின் போது அவர் எழுதி பேசிய அஞ்சலி கவிதையாகிய அன்புக்கு மூன்று எழுத்து அறிவிற்கு மூன்று எழுத்து என்று அவர் எழுதிய கவிதையை அவர் குரலிலேயே பேசி மகிழ்வேன்.. அது போல தான் விகடனையும் ஜூவியையும் வெளி வரும் அன்றே வெறியுடன் வாங்கி படிப்பேன் நான் வழக்கமாக செல்லும் கடைக்காரரிடம் அவர் கடைக்கு 2 அல்லது மூன்று தடவையாவது சென்று புத்தகம் வந்துவிட்டதா என்று கேட்டு சேட்டு செல்வேன் பொறுமை இல்லாமல் புக் கிடைக்கும் வரை ரெஸ்ட்லஸ்சாக இருப்பேன். ஆனால் இப்ப???


சில ஆண்டுகளுக்கு முன்பு எனது வலைத்தளத்தையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்திய விகடனாருக்கு எனது நன்றிகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. in the present political concious tamilnadu.. very few magazines daily newspapers are not partyoriented...
    ananda vikatan could not maintain the neutral attitude
    fallen into the trap of dmk
    still many believe that the management /propreitorship is with dmk A.V had nurtured good writers sociologists from other than brahmin communities...
    and the GREAT THING DONE BY THE PROPRIETOR THIRU BALASUBBRAMANYAN was
    HE HAD DONATED HIS BODY TO THE GOVT HOSPITAL AFTER HIS DEATH..
    NO RITUALS...NOKARYAMS...NO RELIGIOUS CASTE ORIENTED RITUALS WERE DONE AT THE TIME OF HIS DEATH
    THE SO CALLED DRAVIDIAN LEADERS COULD NEVER ASK OR DECIDE THEIR DEAD BODIES BE HANDED TO HOSPITAL....I CHALLENGE BRO...

    ReplyDelete
  2. அன்றைய காலங்களில் புகைவண்டி நிலையங்களில் பளீச்சென்று கண்ணில் படுவது.. "வாங்கி விட்டீர்களா..வாசித்து விட்டீர்களா".. இந்த வார ஆனந்தவிகடன் என்கிற விளம்பர பலகைகளில் அந்த தாத்தா சிரித்தபடி கேட்பது வழக்கம்..உடனே வாங்கி வாசிக்க தாேணும் ஆனால் தற்பாேது விகடன்கைமாறிய பிறகு வாங்க ....?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.