Friday, December 29, 2017

'சாட்'டிங்கா  'சீட்'டிங்கா
#avargalunmaigal

உறவு கொள்ளுதல் முத்தம் தருதல் சரசமாடுதல் மட்டும் ஏமாற்றுதல் அல்ல ......மனைவிக்கு பிடிக்காத போது மற்றொரு பெண்ணுக்கு டெக்ஸ்ட் அனுப்புதல், இன்பாக்ஸில் பேசுதல் மூலம்தான் மற்றொரு பெண்ணின் தோழமையை தக்க வைக்க முடியும் என்று நினைப்பதும் ஏமாற்றுதல்தான் முன்னது உடல் ரீதியான ஏமாற்றுதல் என்றால் இது மனரீதியான ஏமாற்றுதல் அவ்வளவுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. நல்லவேளை, அப்படி எதுவும் நான் செய்த(வ)தில்லை

    ReplyDelete
    Replies
    1. தப்பு பண்ணிட்டீங்க ஸ்ரீராம் தப்பு பண்ணிட்டீங்க......ஹீஹீ

      Delete
  2. நிதர்சனமான உண்மை தமிழரே...

    ReplyDelete
    Replies
    1. நாட்டில் நடப்பதைத்தான் இந்த மதுரையானந்தா சொல்லி இருக்கிறார்,,,,,
      இது தவறு என்று தெரிந்தாலும் சமுகவலைதளங்கள் வருவதற்கு முன்பும் இது போல நடந்து கொண்டிருந்தன இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

      Delete
  3. எல்லாம் சரிதான். ஆனா, எல்லா மெசேஜையும் அழிக்காம வச்சுக்க முடியாதே! ஏன்னா என்ற வூட்டுக்கார் என் ஃபோனை ஆராய்ச்சி பண்ண மாட்டாரு

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை அவருக்கு அவர் கேர்ள்ப்ரெண்ட் அனுப்புகிற மெசேஜ்களை படிப்பதற்கே நேரமில்லை போல பாவம் அவர் என்னதான் பண்ணுவார்

      Delete
  4. ஹலோ ப்ரண்ட் !! நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க .எதுக்கு மறைவா செய்யணும் துணைக்கு தெரியாம போனாலும் கடவுள் பார்த்திட்டிருக்காரே

    ReplyDelete
    Replies
    1. கடவுள் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? அவர்களை பொருத்தவரை தங்கள் துணைகள் பார்த்துவிடக் கூடாதே என்பது மட்டும்தான் கவலை

      Delete
  5. மதுரையானந்தாவின் பொன்மொழி சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மதுரையானந்தாவின் சிஷ்யையாக இருப்பதால்சூப்பர் என்று சொல்லி இருக்கீங்க போல

      Delete
  6. மதுரையானந்தா ஞானந்தாவா மாறிட்டாரு
    உடலைவிட மனதால் ஏமாறுவது பெரிய விஷயமில்லைனு நினைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள் பிரகஸ்பதிகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.