Wednesday, December 20, 2017

@avargalUnmaigal
அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? did i say something wrong


எனக்கு தெரிஞ்ச குடும்பத்தை சார்ந்தவர்கள் வீட்டிற்கு வந்தனர். எப்ப பார்த்தாலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை சண்டை சண்டைதான்.. அது மட்டுமல்ல சண்டை போட்டுகிட்டு என் கிட்ட வந்த நியாயம் கேட்பாங்க... இவர்களின் சண்டை தினத்தந்தியில் வரும் கன்னிதீவு மாதிரி  முடிவே இல்லாமல் தொடர்ந்துகிட்டே இருந்தது...


வழக்கம் போல சண்டை போட்டுகிட்டு எங்கிட்ட நியாயம் கேட்க வந்தாங்க..  இது என்னடா தொந்தரவா இருக்கு என்று நினைத்து என் கிட்னியை கசக்கி பிழிஞ்சு யோசித்து இறுதியில் அவங்ககிட்ட சொன்னேன். நான் சொல்லப் போகிற இந்த ஐடியாவை கேளுங்க அதற்கு பிறகு உங்களுக்குள் சண்டையே வாராது என்றேன். அவர்களும் ஆர்வமாக சொல்லுங்க மதுரைத்தமிழன் சொல்லுங்க நாங்க உங்க அட்வைஸை கேட்க மிக ஆவலாக இருக்கிறோம் என்றார்கள்..

அப்படி அவர்கள் ஆர்வமாக கேட்கும் போது நம்மால் சொல்லாமல் இருக்க முடியுமா... அதனால அதை அவங்கிட்ட சொன்னேன் அது என்னவென்று உங்கள்கிட்டேயும் சொல்லுறேன். ஒருவேளை உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் நான் சொல்வதை நடை முறைப்படுத்தி பாருங்க...


அவங்ககிட்ட நான் சொன்னது இதுதான்.... ஒரு மாதத்திற்கு ஒருவரை ஒருவர் தொட்டு பேசாதீங்க.(No Touching). அணைத்தும் (No Huging) கொள்ள வேண்டாம்... ஏன் உங்கள் இருவருக்கும் இடையே உறவும்(No Sex) இருக்க கூடாது என்றேன்..


அதை கேட்ட அவர்கள் போடா டேய் போடா என்று சொல்லிவிட்டு சென்றவர்கள்தான்.... ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர்கள் என் வீட்டு பக்கமே வருவதில்லை.. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் முன்பு மாதிரி சண்டையே போடுவதில்லையாம்.. மிக சந்தோஷமாக வாழ்கிறார்களாம்.. ஆனால் என்னவென்று தெரியவில்லை ....அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்த போது நீங்கள் என்னவோ அவர்கள்கிட்டே சொல்லிவிட்டீர்களாம் அதனால் அவர்கள் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்களாம். ஆமாம் அப்படி  நீங்கள் என்ன சொல்லிவீட்டீர்கள் என்று என் தெருவில் உள்ளவர்கள் எல்லாம் எங்கிட்டே கேட்கிறார்கள்


ஆமாம் அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்......உங்களுக்கு தெரிஞ்சா நீங்கள் எங்கிட்டே சொல்லுங்க மக்கா



அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. தப்பு இல்லை, சரியாகத்தான் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. இதை நகைச்சுவையாகவோ, ஆபாசமாகவோ நினைக்க முடியவில்லை.

    வாழ்வின் அடிநாதமே இதுதானே... இதில் நீங்கள் "கை" வைத்ததால் அவர்கள் உங்கள் வீட்டில் "கால்" வைக்கவில்லை.

    சொன்னதுதான் சற்று பப்பரப்பான்... னு ஜொள்ளிட்டீங்க...

    ReplyDelete
  3. நீங்க அப்பூடி ஒண்ணும் தப்பாவே ஜொல்லலியே ட்றுத்:).. நீங்க பல வருடமாகக் கடைப்பிடிக்கும் உங்கட சொந்த அனுபவத்தை:).. ஆக ஒரு மாதம் மட்டும்தானே அவர்களைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறீங்க:)) ஹா ஹா ஹா இதுதான் இக்காலத்தில நன்மைக்குக் காலமில்லை என்பினமோ:).. ஹையோ ஹையோ உங்க கிட்னி பத்திரம் ..ட்றம்ப் அங்கிளே களவெடுத்தாலும் எடுத்திடுவார்:)..

    ReplyDelete
  4. ஓஹோ !! நீங்கதானா அது ட்ரம்ப் அங்கிள் கிட்டயும் இதை சொல்லியிருக்கீங்க அவர் மனைவி Melaniaகிட்டயும் இதையே சொல்லியிருக்கீங்க அதனால்தான் ரெண்டு பேரும் பிளேனை விட்டு இறங்கும்போது கையை தள்ளி விட்டு போனாங்க :)
    கர்ர்ர் ஹாஹ்ஹா

    ReplyDelete
  5. ஜோக்ஸ் அபார்ட் ..நீங்க சொன்னது மிக சரி .ஆனா இனிமே அட்வைஸ் சும்மா தராதீங்க ..பேமண்ட் வாங்கிட்டு பேப்பரில் சைன் வாங்கிட்டு கொடுங்க :)

    ReplyDelete
  6. ஹாஹா நல்ல அட்வைஸ் தான்!

    ReplyDelete
  7. நல்ல ஐடியாதான் சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  8. நல்லது .....சண்டை போடமுடியவில்லையே என்று கோபம் வந்திருக்கும் விடுங்க உங்க அரசியலில் இதெல்லாம் சகஜமாச்சே :-)

    ReplyDelete
  9. தாங்கள் சொன்னதன் பலன்தான் அவர்களின் சண்டை நீங்கி மகிழ்வான வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது.
    இதில் என்ன தவறு இருக்கிறது.

    ReplyDelete
  10. என்னது உங்க கிட்னியைக் கசக்கிப் பிழிஞ்சீங்களா?!!! அதிரா எங்க போனாங்க...ராயல்டி கேட்டுருப்பாங்களே!!!ஏன் கேக்கலை??!!!!

    கீதா

    ReplyDelete
  11. வாவ்!! மதுரை ரொம்பவே அழகான அட்வைஸ்!! இதுல ஒன்னும் தப்பே இல்லையே!!! இந்த ரகசியத்த பேட்டன்ட் வாங்கி வைச்சுக்கோங்க...ஹா ஹா ஹா ஹா...கோர்ட்ல நிக்கற கேஸுங்களுக்கெல்லாம் அப்புறம் ஃபேமிலி கவுன்ஸலிங்க்ல இது போகச் சான்ஸ் இருக்கு...அதான்...சரிதானே மதுரை??!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.