Wednesday, December 27, 2017

@avargalunmaigal
குருமுர்த்தி அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்?

குருமுர்த்தி தமிழக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என்று முதலில் சொல்லிவிட்டு எதிர்ப்புக்கள் கிளம்பியதும் திறனற்றவர்கள் என்ற அர்த்தத்தில்தான் தான் பேசியதாக பல்டி அடித்திருக்கிறார். ஆனால் அவர் ஆண்மையற்றவர்கள் என்ற வாதத்தில் நிலையாக நின்றிருந்தால், முதல்வரை நிர்வாணமாக வரைந்துவிட்டார் என்று  சொல்லி கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது தமிழக அரசு, முதல்வர் சட்டைப்பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்துவிட்டார் எனச் சொல்லி தினகரன் ஆதரவாளரை கைது செய்தது தமிழகஅரசு, முதல்வரை இழிவுபடுத்தி ட்வீட் போட்ட #sgurumurthy யை  இன்னும் கைது செய்யுமாமல் மெளனம் காப்பது ஏதனால்?

குருமூர்த்தியை கைது செய்து இருந்தால் குருமூர்த்தி சொன்னது உண்மை இல்லை என்று ஆயிருக்குமே......


ஆர்கே நகரில் வெற்றி பெற்ற தினகரனோட எதிர்காலத்தில் டீல் போட மாமா குருமூர்த்தி ஆரம்பித்த விஷயமே இந்த impotent மேட்டர் அல்லது பாஜக ஆர்கே நகரில் வாங்கிய வோட்டுகளை பற்றிய கேலிகளை மக்களிடம் இருந்து திசை திருப்பவே  இந்த impotent மேட்டரை அவிழ்த்துவிட்டு மக்களின் மனநிலையை திசை திருப்ப குருமுர்த்தி முயற்சிக்கிறார் எனலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. புகைப்படத்தில் உள்ள டயலாக்கை மிகவும் இரசித்தேன் தமிழரே
    த.ம.1

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.